காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த கிஜார் ஷேக் முஹம்மது , 23.05.2017 செவ்வாய்க்கிழமை நேற்று இரவு 8 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அவருக்கு வயது 68.
அன்னார், மர்ஹூம் ஹாஃபிழ் பீ.கிதுரு முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் பீ.எம்.கே.அஹ்மது தாஹிர் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் கிஜார் பிள்ளை லெப்பை, கிஜார் முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் கிஜார் செய்யித் அஹ்மது முத்துவாப்பா, மர்ஹூம் கிஜார் செய்யிது இப்றாஹீம், கிஜார் ஹைதர் அலீ, கிஜார் முஹம்மது யூஸுஃப் ஆகியோரின் சகோதரரும்,
நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம், எம்.ஏ.முஹம்மத் யாஸீன் ஆகியோரின் மைத்துனருமான இவர்கள், காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் உடைய சகோதரியின் கணவரும்,
லண்டன் எம்.ஏ.அபூபக்கர், எஸ்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ, டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப் ஆகியோரின் சகலையும் ஆவார்கள்.
மேலும் அன்னார் , ஹாஃபிழ் கிஜார் முஹம்மத் ஆஷிக் என்பவரின் தந்தையும், கே.எம்.ஏ.ஷேக் முஹம்மது , ஹாஃபிழ் கே.எம்.ஏ.முஹம்மது அப்துல் காதிர் ஆகியோரின் தந்தையின் தந்தையுமாவார்கள் .
அன்னாரின் ஜனாஸா, 24 -05 -2017 புதன்கிழமை இன்று 5 மணியளவில் , காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி : S.K. ஸாலிஹ்