காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்க் அப்துல் காதிர்,26-05-2017 வெள்ளிக்கிழமை இன்று பகல் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அவருக்கு வயது 75.
அன்னார், மர்ஹூம் ச.ம.கு.முஹம்மத் சுலைமான் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் மு.சு.லெ.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மருமகனாரும், எஸ்.எல்.மஹ்மூத் லெப்பை, மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.எல்.முஹ்யித்தீன் தம்பி (ஜின்னா) ஆகியோரின் சகோதரரும்,எஸ்.ஏ.கே.சுலைமான் லெப்பை, எஸ்.ஏ.கே.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் தந்தையுமான இவர்கள்
எம்.டீ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மாமனாரும், எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி, எம்.கே.எம்.முஹ்யித்தீன் தம்பி, மர்ஹூம் எஸ்.எம்.கே.அபூபக்கர் ஸித்தீக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்கள்.
மேலும் அன்னார் , எம்.கே.அபுல் பரக்காத் அவர்களின் மச்சானும், வி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி என்பவரது சகலையும், எம்.ஏ.கே.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஏ.சி.செய்யித் ஹாரிஸ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 26-05-2017 இன்று இரவு 9 மணியளவில் , காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி :S.K. ஸாலிஹ்