கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.என்.மீரான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் – கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் அமைந்துள்ள சினேகாஞ்சலி கம்யூனிட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
துவக்க நிகழ்வுகள்:
அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மன்றத்தின் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், துணைச் செயலாளர் சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் செய்தி தொடர்பாளர் s. n. மீரான் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களுடைய மகனார் முஹம்மத் இஃப்ராஹிம் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்களையும், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களையும், மன்ற தலைவர் அவர்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி: மழழைகள் மொழியில் மலபார் மழைகள் சற்று ஓய்வு எடுத்தன…. நோன்பு துறக்க நேரம் நெருங்குவது தெரியாமல் மன்றம் குழந்தைகள் பேச்சால் மூழ்கியது…..
சிறுவர்-சிறுமியருக்கான இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும் தமது திறமைகளை அழகுற வெளிக்காட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர். மாஷா அல்லாஹ்…
மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவளார்களின் பிள்ளைகள் 3 வயதில் இருந்து 12 வயது வரையான 25 குழந்தைகள், அவர்கள் மழளைக் குரலில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தும் வித்தை கேட்க்கும் பொழுது செவிகளுக்கு இதமாகவும் மொத்தத்தில் அனைவர்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக இருந்தது.அல்ஹம்துலில்லாஹ் k s காதர்,சிறப்பு விருந்தினர் ஷாநவாஸ்,முன்னால் தலைவர் மஸ்வூத் இவர்கள் அனைவரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
வாழ்த்து கவிதை:
காயல் தமிழ் கவிஞர் s. a. பாதுல் அஸ்ஹாப் அவர்கள் மலபார் மன்றம் குறித்து அழகிய கவிதை இயற்றினார் அதன் தொகுப்பு காயல் நல மன்றங்களின் சிறப்புகள் உள்ளடங்கிய சிறு கவிதை ஒன்று மலபார் நாட்டிலே ஒரு மகிழ் கூடம் எங்கள் மலபார் காயல் நல மன்றம்
காயல் மண்ணிள்.புன்னகை மலரவே ஆங்காங்கே பூத்து குலுங்குகிறது…காயல் மன்றங்கள்
மனிதாபிமானத்தில் மலையளவு உயர்ந்து,,,உதவீக்கரம் நீட்டுவதில் முழு நிலவாய் ஜொலித்து,,,ஒற்றுமை பிடியில் ஓயாத கடல் அலையாய் அடித்து ஓங்கி வளர்ந்த அழகிய பசும் சோலை எங்கள் காயல் மன்றங்கள் யாவும்
மன்றங்களிள்.தனிமனித அதிகாரம் இல்லை தான்தோன்றி தலைகணம் கொண்ட அகங்காரம் இல்லை ஒற்றுமை எனும் வேலி போட்டு உருவாக்கப்பட்ட அன்பு கலந்த அழகிய பூந்தோட்டம் எங்கள் மன்றங்கள்..
பனிச்சுமை கொண்டிரிந்தாலும் மன்றம் மீது பாசச்சுமை கொண்டு உழைக்கும் மன்றத்தின் பொறுப்பாளர்களே
அன்பு கொள்வதில் அழகானவர்களாய்.வேலை செய்வதில் வெள்ளந்தியாளர்களாய் இருக்கிறார்கள்.எங்கள் மன்ற உறுப்பினர் சொந்தங்கள்
புன்னகை தவிழும் புனித ரமலான் மாத நோன்பு திறப்பு நிகழ்ச்சி குடும்பங்களின் ஒன்றுகூடலோடும் மழலை செல்வங்களின் மயங்க வைக்கும் திறமைகளோடும் சிறப்பாக நடைபெறுகிறது..
பூக்கள் மீது விழும் பனித்துளியால் பூவுக்கு சேதம் இல்லை,,,மண்ணின் மீது விழும் மழை துளியால் மண்ணுக்கும் சேதம் இல்லை
ஆனால் கண்ணீர் துளி சிந்தியே பலர் வாழ்வு சத்தம் இல்லாமல் போன கடல் அலையாய்
நோயுற்ற பின்னடைந்த மானிடர்களை தேற்றிவிட்டு அத்துயர் துடைப்போம்..நம்மால் இயன்ற வரை
மறுஉலக நன்மையே அடித்தளம்.அது இன்றி இங்கு இல்லை புகழ்ச்சி புகழாரம்
மன்றங்களின் வளர்ச்சிக்கு மன்றாடி உழைக்கும் கரங்களுக்கு இறைவன் அருள் பொழியட்டும்..
இறைவன் நாடினால்….நம் காயல் மன்றங்கள் யாவும் ஒரே கோட்டு பாதையில் ஒற்றுமையாய் ஒன்றி பயணிக்க நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம்….
என்ற வாழ்த்து வரியோடு நிறைவு செய்தார்.
சாதனை மாணவ மானவியருக்கு பரிசு:
+2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மன்ற உறுப்பினர் நோனார் காதர் மூஸா அவர்களின் மகள் முத்து ஆயிஷா ரிஃப்கா, செய்யது தமீம் அவர்களின் மகனார் ஷாக்கிர் ரஹ்மான் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர் சாளை முஹம்மது உதுமான் அவர்களின் மகள் நிதா அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் cbsc 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக உறுப்பினர் புஹாரி சுலைமான் அவர்களின் மகனார் முஹம்மது அஃஹ்தாப், உறுப்பினர் சீனா மொஹதூம் முஹம்மத் அவர்களின் மகளார் நிஹானா, உறுப்பினர் சவுகத் அலி அவர்களின் மகனார் முஹம்மத் சலீம் அவர்களும்
மேலும் 10 ம் வகுப்பு மாநில தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற , உறுப்பினர் அமீன் சாதிக் அவர்களின் மகள் ஆயிஷா ஹுசைனா,மன்ற பொருளாளர் ஷேக் சலாஹுதீன் அவர்களின் மகளார் ஜலீலா ரித்துவனா அவர்களுக்கும்,சேட் மொஹதூம் முஹம்மத் அவர்களின் மகளார் பாத்திமா முஃப்ரிகா மேலும் செயற்குழு உறுப்பினர் தாவூத் அவர்களுடைய மகனார் முஹம்மத் உஸாமா அவர்களுக்கும் சிறப்புபரிசு வழங்கப்பட்டது…
பரிசுகளை சலீம் பையனூர்,ஹுசைன் கோழி கோடு,m. a. k. அப்துல் காதர், தலசேரி ஹைத்ரூஸ் மற்றும் பிஸ்மில்லாஹ் முஹம்மத் இஸ்மாயில் வழங்கினர்..
இஃப்தார் – நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு பேரீத்தம்பழம், காயல் கஞ்சி பருப்புவடை என உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவும், சுவைபடவும் உணவுப் பதார்த்தங்கள் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. செயற்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களின் மகனார் முஹம்மத் இஃப்ராஹிம் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.
செயலர் சுருக்கவுரை:
அடுத்து, மன்றச் செயலாளர் N. M.அப்துல் காதர் உரையாற்றினார். அவர் தனது உரையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உள்ள அவசியம் பற்றியும் பொதுக்குழு மற்றும் மன்றம் குறித்த அரசு விதிகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்…
சிறப்புரை:
ஷிஃபா வின் செயல்பாடு மற்றும் மக்கள் மருந்தகம் செயல்பாடு குறித்து மன்ற முன்னால் தலைவரும் ஷிஃபா வின் அரங்காவளருமான மஸ்ஊத் அவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய முறையில் விளக்கம் அளித்தார்…
மேலும், செயற்குழு உறுப்பினர் உஸ்மான் லிம்ரா மக்வாவின் செயல்பாடு குறித்தும் நம் பொருளாதார செயல்பாடு நாம் இன்னும் அதிகப்படியாக செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் சிறப்புரை வழங்கினார்கள்.
விருந்தோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்ப பிரியாணி மற்றும் தக்காளி ஜாம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் துணை செயலாளர் asi. முஹம்மது சிராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் அவர் தனது உரையில் இரண்டு நாள் கோழிக்கோடு மாவட்டம் வேலை நிறுத்தத்திழும் நம் உறுப்பினர்கள் அயராத பங்களிப்பை நினைவு கூர்ந்தார் கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு, இரவுணவு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இரவு 08.30 மணியளவில், அனைவரும் தத்தம் வசிப்பிடம் திரும்பினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.