காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த சொளுக்கு எஸ்.இ.செய்யிது ராபியாஅவர்கள், 07-07-2017 வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . அவருக்கு வயது 75.
அன்னார், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.இ.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மகளும், மர்ஹூம் குளம் மூஸா நெய்னா அவர்களின் மருமகளாரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மர்ஹூம் குளம் முஹம்மது இப்றாஹீம் என்ற இப்றாஹீம் சார் அவர்களின் மனைவியும்,
குளம் அல்அமான் கபீர், மர்ஹூம் குளம் எம்.எஸ்.ஃபாரூக் ஆகியோரின் சகோதரரது மனைவியுமான இவர்கள் ,
சொளுக்கு எஸ்.இ.செய்யிது அஹ்மது , சொளுக்கு எஸ்.இ.அமானுல்லாஹ் என்ற காயல் அமானுல்லாஹ், மர்ஹூம் சொளுக்கு எஸ்.இ.செய்யிது இப்றாஹீம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள் .
மேலும் அன்னார், குளம் எம்.ஐ.மூஸா நெய்னா , குளம் எம்.ஐ.முஹம்மத் தம்பி, குளம் எம்.ஐ.செய்யிது இஸ்மாஈல், குளம் எம்.ஐ.பஷீர் அலீ, மர்ஹூம் குளம் எம்.ஐ.சபீர் அஹ்மது , குளம் எம்.ஐ.ஃபைஸல் அஹ்மது ஆகியோரின் தாயாரும்,
சொளுக்கு எம்.இ.செய்யிது முஹம்மது ஸாஹிப் என்ற செய்மூஸா , சாளை எம்.செய்யித் முஹம்மது புகாரீ , சொளுக்கு எஸ்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும்,
குளம் எம்.டீ.செய்யித் அஹ்மத் கபீர், குளம் எம்.என்.முஹம்மத் இப்றாஹீம், குளம் எம்.டீ.முஹம்மத் இப்றாஹீம், குளம் எஸ்.ஐ.முஹம்மத் இப்றாஹீம், குளம் பி.ஏ.முஹம்மத் இப்றாஹீம், குளம் பி.ஏ.மூஸா நெய்னா, மர்ஹூம் குளம் எம்.டீ.ஹாமித், குளம் எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் வாப்பிச்சாவும் ,
சொளுக்கு எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஜமீல், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம், சொளுக்கு எஸ்.டீ.செய்யித் அஹ்மத், சொளுக்கு எஸ்.டீ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் கம்மாவும் ஆவார்கள் .
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ், 08-07-2017 சனிக்கிழமை இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .