29-07-2017 அன்று அனிதா குமரன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாரணர் (Scout) இயக்க முகாமில் முஹ்யித்தீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
அங்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் எமது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்றுவரும் மாணவன் ஆகாஷ் முதல் பரிசை தட்டிச் சென்றான்.போட்டிக்கான தலைப்பு, போட்டி நடைபெற்ற நேரத்தில் தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களிடம் தங்கள் கற்றுக் கொண்டதை எல்லோரிடம் பகிர்ந்து கொள்ளுமாறு மேடைக்கு அழைக்கப்பெற்றனர்.
அவ்வாறு அழைக்கப்பட்ட மாணவர்களில் எமது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் முஹம்மது இஸ்மாயில் அங்கு குழுமி இருந்த மாணவர்கள் அனைவர் முன்னிலையிலும் தான் கற்றுக் கொண்ட அனுபவங்களை ஆங்கில மொழியில் பகிர்ந்து , அனைவரின் பாராட்டுதலை பெற்றான்.
நிலைப்படம் மற்றும் தகவல்: பள்ளி நிர்வாகம்