காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை வழங்கியுள்ளத் தகவல் :
காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர் மீரா தம்பி அவர்கள், கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து , காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள் .
இந்நிலையில், SRM நிறுவன அதிபர் திரு பச்சை முத்து என்ற பாரிவேந்தர் அவர்களை இன்று மாலை பேரவையின் சார்பில் சந்தித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது .
நடைபெற்ற நிகழ்வை அவரிடத்தில் விளக்கமாக எடுத்துக் கூறி மரணமடைந்த சகோதரரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுமாறு பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நமது கோரிக்கையை பரிவோடும், மனிதாபியமான உணர்வோடும், மிகுந்த அக்கறையோடும் கேட்டறிந்த திரு பாரிவேந்தர் அவர்கள் , இத்தகவல் தனக்கு தற்போது தான் தெரிய வந்தது எனத் தெரிவித்ததோடு , உரிய இழப்பீட்டை காலம் சென்ற சகோதரரின் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் வழங்கிடவும் உறுதி அளித்துள்ளார் .
இது தொடர்பாக நாளை தகவல் தெரிவித்து மீண்டும் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இச்சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அபூபக்கர் , சென்னையைச் சார்ந்த முஸ்லீம் லீக் பிரமுகர் ஜனாப் நிஜாமுத்தீன் , பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர் .
மேலும், 31-08-2017 வியாழக்கிழமை காலை பேரவையின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்து அரசின் இழப்பீடு கிடைத்திட கோரிக்கை அளிக்க உள்ளோம் .
எல்லாம் வல்ல இறைவன் நமது நல்ல நோக்கங்களுக்கு வெற்றியை தந்தருள்வானாக
தகவல்: நிர்வாகிகள் , காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை